Sunday, May 15, 2011

மனக்கசப்பு

காதலர்களுக்கிடையே மனக்கசப்பு,
தின மலர் நாளிதழைப் போல
சண்டேனா ரெண்டு....
கவிதை எழுத துடிக்கிறேன்,
இயலவில்லை..
என்னுள் கவிதையாய் நீ!!!

என்னவென்று சொல்ல...

எதைச் சொல்ல,
எனக்கு கண் வலி என்று தெரிந்ததும் எனக்கு மருந்து போட்டு
என் கண்மணி என்னை கருத்தாய் கவனித்து கொண்டாலே!!
அதைச் சொல்லவா..

ஆனால் இப்போது...
இதை எதையுமே சொல்ல இயலாமல் நான் மட்டும் தனிமையில் இருப்பதை என்னவென்று சொல்ல....
அவளுக்கு நான் தாலி கட்டும் நேரத்தில் !!!
" ராஜன் " என " எழுப்பியது "
என் அம்மாவின் குரல்...